புதுச்சேரி

முற்றுகையில் ஈடுபட்ட அமைச்சக ஊழியர்கள்

அரசு செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைச்சக ஊழியர்கள்

Published On 2022-10-28 14:53 IST   |   Update On 2022-10-28 14:53:00 IST
  • புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • இந்த நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் தலைமைச் செயலகத்தில் திரண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முதல் கட்டமாக ௧௧௬ யூ.டி.சி. ஊழியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.அடுத்தக்கட்டமாக எல்.டி.சி., உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் உதவியாளர் பணியிடத்தை நேரடியாக தேர்வு செய்தால் தங்கள் பதவி உயர்வு பாதிக்கப்படும் என அமைச்சக ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் தலைமைச் செயலகத்தில் திரண்டனர். அங்கு நிர்வாகத்துறை செயலர் கேசவன் அறை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், நேரடியாக உதவியாளர் தேர்வால் 600 அமைச்சக ஊழியர்கள் பதவி உயர்வு பாதிக்கப்படும் எனவே, இதற்கு முடிவு தெரியும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். 

Tags:    

Similar News