புதுச்சேரி

கோப்பு படம்.

ரூ.120 கோடி கடன்பெற அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

Published On 2023-03-08 14:50 IST   |   Update On 2023-03-08 14:50:00 IST
  • புதுவையில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், நீர்பாசனம், ஏரி கரைகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடம் கடன் பெற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
  • இதுவரை ரூ.76 கோடி கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், நீர்பாசனம், ஏரி கரைகளை மேம்படுத்த நபார்டு வங்கியிடம் கடன் பெற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

சட்டசபை அமைச்சர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன், பொது மேலாளர் நசியாநிசாமுதீன், துணை உதவி பொது மேலாளர் பாலமுருகன், புதுவை நபார்டு வழங்கி துணை மேலாளர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மொத்தம் ரூ.120 கோடி கடன் வழங்க அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை ரூ.76 கோடி கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.44 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என நபார்டு வழங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். அடுத்த ஆண்டுக்கு ரூ.120 கோடிக்கான திட்டங்களை அனுப்பலாம் என்றும் நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News