புதுச்சேரி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-12-25 13:52 IST   |   Update On 2022-12-25 13:52:00 IST
  • புதுவை அரசு நலவழித்துறை தேசிய மனநல திட்டத்தின் சார்பில் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவர்கள் பங்கு பெற்றனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு நலவழித்துறை தேசிய மனநல திட்டத்தின் சார்பில் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனை மனநல டாக்டர்கள் கெஜலட்சுமி, அவின், மனநல ஆலோசகர் பொன்னி ஆகியோர் பேசினர்.

மருத்துவமனை பொறுப்பு டாக்டர் அபர்ணா வரவேற்றார். ஏ.என்.எம். லலிதா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவர்கள் பங்கு பெற்றனர்.

Tags:    

Similar News