புதுச்சேரி

காரைக்கால் எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்

மங்களூரு வெடிவிபத்து எதிரொலி- காரைக்கால் லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-11-23 12:02 IST   |   Update On 2022-11-23 12:02:00 IST
  • நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்கால்:

கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து, பெங்களூருவில் குக்கர் வெடிவிபத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் குண்டு வெடிப்பை ஏற்படுத்தியவர்கள், அண்டை மாநிலமான தமிழகம், புதுச்சேரியில் அடைக்கலமாகலாம் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள காரைக்கால் மாவட்ட எல்லைகளில், சாலைகளில், காரைக்கால் திரு.பட்டினம் போலீசார், போலீஸ் சூப்பிரண்ட் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவிச்செல்வன், நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், லாட்ஜ்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News