புதுச்சேரி

மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாகக்குழு நடந்த போது எடுத்த படம்.

உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் - மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்

Published On 2022-07-16 10:02 IST   |   Update On 2022-07-16 10:02:00 IST
  • புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் கூட்டம் குயவர்பாளையத்தில் நடந்தது
  • பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முத்துக்கண்ணு உலக அரசியல் குறித்தும் லெனின் புதுவை அரசியல் நிலவரம் குறித்தும் பேசினர்.

புதுச்சேரி:

புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் கூட்டம் குயவர்பாளையத்தில் நடந்தது. நிர்வாகக் குழு உறுப்பினர் சூர்யமூர்த்தி வரவேற்றார். பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முத்துக்கண்ணு உலக அரசியல் குறித்தும் லெனின் புதுவை அரசியல் நிலவரம் குறித்தும் பேசினர்.

இக்கூட்டத்தில், புதுவையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்ப ட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் புதுவை அரசை வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒத்த கருத்துடைய இயக்கங்களோடு இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். முடிவில் மூத்த உறுப்பினர் கோபிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News