புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சட்ட மன்ற உறுதி மொழி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

சட்டமன்ற உறுதிமொழி குழு ஆலோசனை

Published On 2022-12-16 14:34 IST   |   Update On 2022-12-16 14:34:00 IST
  • புதுவை சட்டப்பேரவை உறுதி மொழி குழுவின் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடந்தது.
  • சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் மற்றும் அவற்றில் நிறைவேற்றப்பட்டவை, நிறைவேற்ற வேண்டியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை சட்டப்பேரவை உறுதி மொழி குழுவின் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடந்தது.

சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் நேரு தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், அனிபால் கென்னடி, சிவசங்கரன், உள்ளாட்சி துறை செயலர் வல்லவன், சட்டசபை செயலாளர் தயாளன், நகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் மற்றும் அவற்றில் நிறைவேற்றப்பட்டவை, நிறைவேற்ற வேண்டியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News