- தவளக்குப்பம் போலீசார் வாழ்முனி, சண்முகசுந்தரம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்ததில் அவர் டி.என். பாளையம் உடையார் தெருவை சேர்ந்த சக்திவேல் மற்றும் சண்முகம் (வயது 23) என தெரியவந்தது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் போலீசார் வாழ்முனி, சண்முகசுந்தரம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அபிஷேகப்பாக்கம் - டி.என்.பாளையம் பகுதியில் இருந்த போது அங்கிருந்தவர்கள் டி. என்.பாளையம் பகுதியில் உள்ள ஏ.ஜே. தனியார் பள்ளி அருகில் நின்று கொண்டு ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்ததில் அவர் டி.என். பாளையம் உடையார் தெருவை சேர்ந்த சக்திவேல் மற்றும் சண்முகம் (வயது 23) என தெரியவந்தது.
பொதுமக்களை ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி மிரட்டிய சண்முகத்தை கத்தியுடன் போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இது சம்பந்தமான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. சண்முகம் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை கரும்பு தோட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து ஜாமீன் வந்துள்ளார்.
இந்த நிலையில் சண்மு கமும் பழைய நண்பரான அபிஷேகபாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரும் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் கேலி கிண்டல் செய்து கொள்ளும் போது வாய் தகராறாக மாறி உள்ளது. வயதான ஒருவரை கொலை செய்து விட்டால் நீ என்ன பெரிய கொலைகாரனா? என்று கேட்டு லட்சுமணன் ஏளனம் செய்துள்ளனர். இது இருதரப்பினரும் இடையே பகையாக மாறிவிட்டது.
இதனால் இரு தரப்பிற்கு இடையே அவ்வப்போது தகராறும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு தரப்பினரும் பலத்த ஆயுதங்களுடன் மோதிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஏற்கனவே அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த 2 பேரை வீச்சு அரிவாளுடன் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான சண்முகத்தையும் கத்தியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ரோந்து மற்றும் கிரைம் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.