- இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 7,8 ஆகிய 2 தினங்கள் புதுச்சேரிக்கு வர உள்ளார்.
- கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.
புதுச்சேரி:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 7,8 ஆகிய 2 தினங்கள் புதுச்சேரிக்கு வர உள்ளார்.
ஜனாதிபதி வருகையின் போது முருகப்பாக்கம் பகுதியில் உள்ள கைவினை கிராமம் மற்றும் திருக்காஞ்சி பகுதியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.
இதற்காக பொதுப்பணித்துறையின் மூலம் சாலை பராமரிப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தவளக்குப்பம் இடையார்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருவழிச்சாலைக்காக போடப்பட்ட ரப்பரிலான தடுப்புக்கட்டை சேதமடைந்திருந்ததால் அதனை முற்றிலுமாக அகற்றி சிமெண்டிலான தடுப்புக் கட்டையை அமைக்க பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் பகல் இரவாக செய்து வருகிறார்கள்.
மேலும் சாலை ஓரங்களை சரி செய்வதும், வண்ணம் அடிப்பதும், தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக பழுதடைந்து இருந்த சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பணி ஓரிரு தினத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.