புதுச்சேரி

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றிய போது எடுத்த படம்.

விடுதலை நாள் கொண்டாட்டம்

Published On 2022-11-02 05:52 GMT   |   Update On 2022-11-02 05:52 GMT
  • புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.
  • ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.

பிறகு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொம்யூன் மேலாளர் குப்பன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், உதவிப்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப்பொறியாளர்கள் ரங்கமன்னார், சத்திய நாராயணன், கருத்தையன் மற்றும் ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News