புதுச்சேரி
- புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.
- ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை விடுதலை நாளையொட்டி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் ஆறுமுகம் தேசியக்கொடியேற்றி மாணவர்களிடம் விடுதலை நாள் குறித்து பேசினார்.
பிறகு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொம்யூன் மேலாளர் குப்பன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், உதவிப்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப்பொறியாளர்கள் ரங்கமன்னார், சத்திய நாராயணன், கருத்தையன் மற்றும் ஊழியர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.