புதுச்சேரி
- தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
- பொறுப்பாசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
பொறுப்பாசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இவ்விழாவில் கல்வித்துறையின் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு கலந்து கொண்டு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆய்வகத்தை திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். விழாவில் அனைத்து ஆசிரியர்களும் ஊழியர்களும கலந்து கொண்டனர்.