புதுச்சேரி

அமாவாசை நோன்பு இருந்து கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கோவிலில் குவிந்த பக்தர்கள்.

புதுவையில் அமாவாசை நோன்பு

Published On 2022-10-25 10:29 IST   |   Update On 2022-10-25 10:29:00 IST
  • தீபாவளி கேதார கவுரி விரதம் இருந்துபக்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
  • இன்று பெண்களும் ஆண்களும் அமாவாசை நோன்பு விரதம் இருந்து வழிபட்டனர்.

புதுச்சேரி:

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று தீபாவளி கேதார கவுரி விரதம் இருந்துபக்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

இன்று பெண்களும் ஆண்களும் அமாவாசை நோன்பு விரதம் இருந்து வழிபட்டனர். அதிகாலை முதலே கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.

மகாகவி பாரதி வழிபட்ட முத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனை தரிசித்து அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து அமாவாசை நோன்பு எடுத்தார்கள்.

மாலையில் சூரியகிரகணம் என்பதால் பிற்பகல் 1.30-க்கு பிறகு கோவில் நடை சாத்தப்படும். இரவு 7 மணிக்கு பிறகே மீண்டும் நடை திறக்கப்படும். இதனால், அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News