புதுச்சேரி

ஹோமியோபதி மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.

ஹோமியோபதி மருத்துவ கருத்தரங்கம்

Published On 2022-09-30 14:48 IST   |   Update On 2022-09-30 14:48:00 IST
  • இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு தொடர் மருத்துவ கருத்தரங்கம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.
  • கருத்தரங்கில் சிறப்பு மருத்துவர் குழந்தையின்மை நிபுணர் சின்சன் ஜோசப், குழந்தை இன்மை மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

புதுச்சேரி:

இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு தொடர் மருத்துவ கருத்தரங்கம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கினை இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஹோமியோபதி தலைமை மருத்துவ அதிகாரி பாலாஜி வரவேற்றார்.

கருத்தரங்கில் சிறப்பு மருத்துவர் குழந்தையின்மை நிபுணர் சின்சன் ஜோசப், குழந்தை இன்மை மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் புதுவை, காரைக்கால் மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவர் சேவர் கொடியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News