வணிகர் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி. கலந்தாய்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
வணிகர் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி. கலந்தாய்வு கூட்டம்
- சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- முதன்மை துணைத் தலைவர் சீனுவாசன், பொதுச் செயலாளர் முருக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பில் மேட்டுப்பாளையம் பழைய இந்தியன் வங்கி எதிரே உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடத்தில் சரக்கு மற்றும் சேவை வரி
(ஜி.எஸ்.டி.) சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் பாபு, முதன்மை துணைத் தலைவர் சீனுவாசன், பொதுச் செயலாளர் முருக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் வணிகவரித் துறை துணை ஆணையர் ஸ்ரீதர், வணிகவரித்துறை அதிகாரி பாலமுருகன் கலந்து கொண்டு பேசினர்.
இதில் இந்தியன் வங்கியின் புதுவை மண்டல முதன்மை மேலாளர் (கடன் பிரிவு) ராதாகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் கிளைமேலாளர் ஹேம்கிருஷ்ணா பாஸ்கர்ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வங்கி சம்பந்தமான கடன்களையும் 2 ஆண்டுகள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) செலுத்தியிருந்தால் இந்தியன் வங்கி சார்பில் ரூ.25 லட்சம் வரை எந்தவித பிணை இல்லாமல் கடன் வழங்கும் என விளக்கினர்.