புதுச்சேரி

கோப்பு படம்.

மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-07-22 15:06 IST   |   Update On 2022-07-22 15:06:00 IST
  • மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் செங்கேணி அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் முருகன்.

புதுச்சேரி:

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் செங்கேணி அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 41). இவருக்கு தமிழ் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். தமிழ் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதையடுத்து முருகனுக்கு குடிப்பழக்கத்தை மறக்க செய்ய அவரை கோட்டக்குப்பத்தில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை கொடுத்து வந்தனர்.

சில நாட்களாக முருகன் மது குடிக்காததால் தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த 2 நாட்களாக மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி தமிழ் கண்டித்து வந்தார். இந்த நிலையில் காலை வழக்கம் போல் தமிழ் மீன் வியாபாரத்துக்கு சென்று விட்டார். பின்னர் வியாபாரம் முடிந்து மாலை தமிழ் வீடு திரும்பிய போது வீட்டின் உள்ளே கணவர் இல்லாததால் சந்தேகம் அடைந்து வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.

அப்போது மீன் பிடிக்க பயன்படுத்தும் நைலான் கையிற்றால் முருகன் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் கணவரை தூக்கிலிருந்து மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி தமிழ் கொடுத்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News