புதுச்சேரி

கோப்பு படம்.

தந்தை-மகனுக்கு கத்தி குத்து

Published On 2022-12-27 14:27 IST   |   Update On 2022-12-27 14:27:00 IST
  • வில்லியனூர் அருகே போலி பத்திரபதிவு செய்து இடம் ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட தந்தை-மகனுக்கு கத்தி குத்து விழுந்தது.
  • இந்த நிலையில் சண்முகம் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்து செல்வி வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே போலி பத்திரபதிவு செய்து இடம் ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட தந்தை-மகனுக்கு கத்தி குத்து விழுந்தது.

வில்லியனூர் அருகே ஏம்பலம் பாலாஜி நகரில் வசித்து வருபவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி செல்வி (வயது49). இவர்கள் குப்புசாமி மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான இடத்தை வாங்கி பார்வதி என்பவர் மூலம் பட்டா மாற்றம் செய்து வசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே செல்வி வசிக்கும் இடத்தில் ஒரு பகுதியை குப்பு சாமி மற்றும் பிரபாகரன் ஆகியோர் போலி பத்திரம் தயார் செய்து அதனை ஷோபனா என்பவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஷோபனாவின் உறவினரான சண்முகம் என்பவர் ஆக்கிரமிப்பு இடத்தில் மணல் கொட்டி செல்வி குடும்பத்தினர் செல்லாத வகையில் இடையூறு செய்திருந்தார். இதனை செல்வி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சண்முகத்தை அழைத்து கண்டித்தனர்.

இந்த நிலையில் சண்முகம் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்து செல்வி வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இதனை செல்வி மற்றும் அவரது கணவர் ஹரிகிருஷ்ணன் தட்டிக்கேட்ட போது சண்முகம் தகாத வார்த்தை களால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் ஹரிகிருஷ்ணனை குத்தி னார்.

இதனால் ஹரிகிரு ஷ்ணனும், அவரது மனைவி செல்வியும் அலறல் சத்தம் போட்டனர்.

இந்த அலறல் சத்தம் கேட்ட ஹரிகிருஷ்ணனின் மகன் விக்னேஷ்(30) என்பவர் தட்டி கேட்ட போது அவரையும் சண்முகம் கத்தியால் குத்தினார்.

அதோடு செல்வியை சண்முகத்தின் உறவினர் ஈஸ்வரி என்பவர் கல்லால் தாக்கினார். மேலும் குப்புசாமி மற்றும் பிரபாகரன் ஆகியோர் செல்வியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வி மற்றும் அவரது கணவர் ஹரிகிருஷ்ணன், மகன் விக்னேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து செல்வி கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News