அகரம் பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர்களின் படைப்பு கண்காட்சியை சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பார்வையிட்டார்.
null
- வில்லியனூரை அடுத்த அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் பல்வேறு செயல் திட்டங்கள் மாணவர்களின் கை வண்ணங்களால் உருவாக்கப்பட்டு பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டது.
- மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சி பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் பல்வேறு செயல் திட்டங்கள் மாணவர்களின் கை வண்ணங்களால் உருவாக்கப்பட்டு பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக சட்டம் ஒழுங்கு சீனியர் சூப்பிரண்டு தீபிகா, கல்கி கெமிக்கல்ஸ் இயக்குனரும், யங் இந்தியா அமைப்பின் தலைவருமான திலீப், அனிருத்தா, ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை பார்வையிட்டனர்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன், பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் தலைமை தாங்கினர். இந்த கண்காட்சியில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலயன், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சி பார்வையிட்டனர்.