புதுச்சேரி

கோப்பு படம்.

எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-01-28 04:36 GMT   |   Update On 2023-01-28 04:36 GMT
  • காலாப்பட்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த வேதனையில் எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • ஆனாலும், மகள் காதல் திருமணம் செய்ததை ஆனந்தனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனந்தன் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

புதுச்சேரி:

காலாப்பட்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த வேதனையில் எலக்ட்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது48). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 மகளும் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தனின் மூத்த மகள் வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆனந்தன் மனவருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு அவரது மனைவி ராஜ லட்சுமி ஆறுதல் கூறி வந்தார். ஆனாலும், மகள் காதல் திருமணம் செய்ததை ஆனந்தனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனந்தன் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவருக்கு ராஜலட்சுமி பணத்தை கொடுத்து விட்டு தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜலட்சுமி கதவை உடைத்து பார்த்த போது கணவர் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து ராஜலட்சுமி காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகள் காதல் திருமணம் செய்ததால் மனவேதனையடைந்து எலட்க்ரீஷியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News