புதுச்சேரி
- பேரிடர் கால ஒத்திகை இன்று நடத்தப்பட்டது.
- அனைத்து துறைகள் ஒத்துழைப்போடு ஒத்திகை நடந்தது.
புதுச்சேரி:
புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பேரிடர் கால ஒத்திகை இன்று நடத்தப்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்முகமை, தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்திய வானிலை மையம் இணைந்து புதுவை அரசின் அனைத்து துறைகள் ஒத்துழைப்போடு ஒத்திகை நடந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் சேர்ப்பது, மருத்துவம், உணவு வழங்குதல், முதலுதவி குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.
தவளக்குப்பம் என்.ஆர்.நகர், காலாப் பட்டு, கரிக்கலாம்பாக்கம் சுகாதார மையம், ஆரியப்பாளையம் பாலம் உட்பட 5 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.