புதுச்சேரி

கோப்பு படம்.

பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்-தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2022-12-01 05:02 GMT   |   Update On 2022-12-01 05:02 GMT
  • மத்திய வேளாண் மற்றும் விவசாயநலத்துறை அமைச்சகம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.
  • இந்த முகாமின் நோக்கம் பயிர்காப்பீட்டு திட்டத்தில் எனது காப்பீடு என் கையில் என்ற குறிக்கோளுடன் விவசாயிகளுக்குபயிர் காப்பீடு திட்டத்தை விவரித்தல், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்,

புதுச்சேரி:

மத்திய வேளாண் மற்றும் விவசாயநலத்துறை அமைச்சகம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் பயிர் காப்பீட்டு வாரம் என்ற தலைப்பில்  முதல் 7-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட ப்பட்டுள்ளது.

புதுவையில் கரிக்கலாம்பாக்கம் லட்சுமி திருமண மண்டபத்தில் பயிர் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்  தொடங்கியது.

முகாமை வேளா ண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு முகாம் உறுவையாறு, ராமநாதபுரம், 3-ந் தேதி பண்டசோழநல்லூர், திருக்காஞ்சி, 4-ந் தேதி டி.என்.பாளையம், மண்ணாடிப்பட்டு, 5-ந் தேதி அரங்கனூர் , அரியூர், 6-ந் தேதி மணமேடு, சந்தைபுதுக்குப்பம், 7-ந் தேதி உச்சிமேடு, மதகடிப்பட்டு ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த முகாமின் நோக்கம் பயிர்காப்பீட்டு திட்டத்தில் எனது காப்பீடு என் கையில் என்ற குறிக்கோளுடன் விவசாயிகளுக்குபயிர் காப்பீடு திட்டத்தை விவரித்தல், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல், சான்றிதழ் வழங்குதல், பயிர் காப்பீடு செயலிபதிவிறக்கம், பயன்பாடு உட்பட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News