புதுச்சேரி

ரோட்டில் சுற்றி திரியும் மாடுகள்

ரோட்டில் சுற்றி திரியும் மாடுகள்-வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-01-02 09:20 IST   |   Update On 2023-01-02 09:20:00 IST
  • புதுவை அடுத்துள்ள வில்லியனூரியில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ளது.
  • மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை ரோடுகளில் சுற்றி திரிய விடாமல் கொம்யூன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை அடுத்துள்ள வில்லியனூரியில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ளது. வில்லியனூர் பகுதிக்கு தமிழக மற்றும் புதுவை பகுதியில் இருந்து ஏராளமான பஸ், லாரி, மோட்டார் சைக்கிள்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் அதனை கட்டி வைத்து வளர்க்காமல் ரோடுகளில் திரிய விடுகிறார்கள்.

இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை ரோடுகளில் சுற்றி திரிய விடாமல் கொம்யூன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News