புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் அதிகரிக்கும் கொரோனா

Published On 2023-01-05 14:38 IST   |   Update On 2023-01-05 14:38:00 IST
  • நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
  • புதுவை, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

புதிய உருமாறிய கொரோனாவும் பரவ தொடங்கியுள்ளது. புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்து வந்தது. இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புதுவையில் ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 9, காரைக்காலில் ஒருவர் என 10 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் 22, காரைக்காலில் 3, ஏனாமில் 5 பேர் என மொத்தம் 30 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

புதுவை, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 90 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News