புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் 24 பேருக்கு கொரோனா

Published On 2022-10-06 09:28 GMT   |   Update On 2022-10-06 09:28 GMT
  • புதுவையில் நேற்று 730 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
  • கோரிமேடு அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டரில் 2 பேர் என 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில்  730 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் புதுவையில் 10 பேர், காரைக்காலில் 14 பேர் என மொத்தம் 24 பேருக்கு தொற்று இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது.. மாகி, ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. தற்போது புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 193 ஆக உள்ளது.

கோரிமேடு அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டரில் 2 பேர் என 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் 189 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் 49 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9,93,368 பேருக்கும், 2-வது டோஸ் 8,55,785 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,88,122 பேருக்கும் என மொத்தம் 22,37,275 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,069 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News