புதுச்சேரி

கோப்பு படம்.

கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு சாவு

Published On 2022-09-25 08:24 GMT   |   Update On 2022-09-25 08:24 GMT
  • நயினார் மண்டபத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • குடும்பத்தை நடத்துவதற்காக சுதர்கனி நயினார் மண்படத்தில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறர்.

புதுச்சேரி:

நயினார் மண்டபத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை நயினார் மண்டபம் பிரிதர்ஷினி நகரை சேர்ந்தவர் பாண்டியன்(வயது53). கட்டிட தொழிலாளி. இவருக்கு சுதர்கனி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் விபத்தில் சிக்கி விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் பாண்டியன் வீட்டில் இருந்து வந்தார். குடும்பத்தை நடத்துவதற்காக சுதர்கனி நயினார் மண்படத்தில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறர்.

இதற்கிடையே பாண்டியன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை செய்வார். அதுபோல் பாண்டியன் மனைவியிடம் டிபன் கேட்டார். அதற்கு சுதர்கனி சாதமும், புதினா சட்னியும் உள்ளதால் அதை எடுத்து சாப்பிடுமாறு கூறி விட்டு வெளியே சென்றார். அப்போது பாண்டியன் ஓட்டலுக்கு சென்று பொங்கல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டார்.

சுதர்கனி எதிர்வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென விரக்தியடைந்த பாண்டியன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த குழந்தைக்கு தொட்டில் கட்ட வைத்திருந்த கயிற்றை எடுத்து தூக்கு போட்டு தொங்கினார். அப்போது வீட்டுக்குள் சென்ற அவரது மகன் அஜித் தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். உடனே சுதர்கனி மற்றும் அக்கம் பக்கத்தினர் பாண்டியனை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி சுதர்கனி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News