கோப்பு படம்.
விமான நிலையத்தில் கடலோர காவல் படை பிரிவுகிழக்கு பிராந்திய தளபதி ஆய்வு
- உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பிராந்திய தளபதியிடம் விளக்கினார்.
- மீனவர்களின் பாதுகாப்பிற்கும், மீட்பு நடவடிக்கைக்கும் உதவும் என கிழக்கு பிராந்திய தளபதி தெரிவித்தார்.
புதுச்சேரி:
இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த் பிரகாஷ் படேலா புதுவைக்கு வந்தார்.
தொடர்ந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அவர் புதுவையில் உள்ள கடலோர காவல்படை மாவட்ட தலைமையக உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.
புதுவை மாவட்ட கடலோர காவல்படை கமாண்டர் டி.ஐ.ஜி அன்பரசன், புதுவையில் அமைய உள்ள கடலோர காவல் படையின் விமா னப்பிரிவு தளம் மற்றும் கடலோர கண்காணிப்பு மையம் உட்பட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பிராந்திய தளபதியிடம் விளக்கினார்.
தொடர்ந்து மத்திய பொதுப்பணித்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் திட்ட ங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரை யாடினார்.
புதுவையில் விமான நிலையத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் விமானப்பிரிவு தளம், புதுவை, மத்திய தமிழக கடலோர மீனவர்களின் பாதுகாப்பிற்கும், மீட்பு நடவடிக்கைக்கும் உதவும் என கிழக்கு பிராந்திய தளபதி தெரிவித்தார்.