புதுச்சேரி

அரிக்கன்மேட்டில் துப்புரவு பணி ஈடுபட்ட காட்சி.

அரிக்கன்மேட்டில் துப்புரவு பணி

Published On 2022-09-23 15:04 IST   |   Update On 2022-09-23 15:04:00 IST
  • மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிகுந்த அரிக்கன்கமேடு பகுதியில் தூய்மை பணியை நடத்தியது.
  • தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதி களில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

புதுச்சேரி:

மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிகுந்த அரிக்கன்கமேடு பகுதியில் தூய்மை பணியை நடத்தியது.

இதன் தொடக்க விழாவில் சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை அரிக்கன்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதி களில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

தொடர்ந்து பசுமை சூழலுக்கான ஸ்வச்சதா பக்வாடா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தூய்மை பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News