கிறிஸ்துமஸ் விழாவில் மழலையர்களுக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பரிசு வழங்கிய காட்சி.
- புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மழலையர் வகுப்பை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிந்த மாணவர் ஒருவர் மழலையர்களுக்கு பரிசுகளை அவர்களுக்குள் பரிமாறி கொடுத்து மகிழ்ந்தார்.
புதுச்சேரி:
புதுவை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மழலையர் வகுப்பை சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள், இயேசு கிறிஸ்துவை பற்றி பாடல்கள் பாடியும் அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வத்தோடு படித்தும், முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும், காட்டினர்.
கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிந்த மாணவர் ஒருவர் மழலையர்களுக்கு பரிசுகளை அவர்களுக்குள் பரிமாறி கொடுத்து மகிழ்ந்தார்.
அப்பரிசு பொருட்களை பெற்ற மழலையர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆராவரத்துடனும் இருந்தனர்.அவ்வழகிய மழலை மலர்களை பள்ளியின் சார்பாக புகைப்படம் எடுக்கப்பட்டும், பரிசு வழங்கப்பட்டும், இனிப்புகள் வழங்கப்பட்டும் மகிழ்விக்கப்பட்டது.
பல்வேறு வேடங்களை அணிந்து வந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்திய மழலையர்களுக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.விழாவில் குழந்தைகளின், பெற்றோர்களும் கலந்து ெகாண்டனர்.