புதுச்சேரி

காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.

காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை

Published On 2023-01-30 14:25 IST   |   Update On 2023-01-30 14:25:00 IST
  • மகாத்மா காந்தியின் நினைவுநாள் புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்களின் தேச பக்திப் பாடல்கள் இசைக்க ப்பட்டன. தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுச்சேரி:

மகாத்மா காந்தியின் நினைவுநாள் புதுவை அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார் லால், கலெக்டர் வல்லவன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்களின் தேச பக்திப் பாடல்கள் இசைக்க ப்பட்டன. தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News