புதுச்சேரி

கோப்பு படம்

கார் டிரைவர் தற்கொலை

Published On 2022-07-21 08:49 GMT   |   Update On 2022-07-21 08:49 GMT
  • மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்

புதுச்சேரி:

மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் தாய் இறந்து போனதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது54). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் சக்திமுருகன் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சக்தி முருகனின் தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்று விட்ட வேதனையில் இருந்த சக்திமுருகன் தாய் இறந்து போனது பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக எண்ணி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இதனை மறக்க தினமும் சக்திமுருகன் மது குடித்து வந்தார். ஆனாலும் தாயின் மரணத்தால் சக்திமுருகன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சக்திமுருகன் வீட்டில் தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News