புதுச்சேரி

கோப்பு படம்

மளிகை கடையை உடைத்து ரூ.1 ½ லட்சம் கொள்ளை

Published On 2022-07-22 04:39 GMT   |   Update On 2022-07-22 04:39 GMT
  • மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
  • மார்க்கெட்டில் பொருட்கள் கடன் வாங்கியதற்கு கொடுப்பதற்காக ரூ.1½ லட்சத்தை மளிகை கடையில் வைத்து பூட்டி விட்டு சக்தி வேல் வீட்டுக்கு சென்றார்.

புதுச்சேரி:

திலாசு பேட்டையில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். புதுவை கதிர்காமம் ஆனந்தா நகர் கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சக்தி வேல். இவர் புதுவை திலாசுபேட்டை வழுதாவூர் சாலையில் மளிகை கடை நடத்திவந்தார்.

இரவு வியாபாரம் முடிந்து காலையில் மார்க்கெட்டில் பொருட்கள் கடன் வாங்கியதற்கு கொடுப்பதற்காக ரூ.1½ லட்சத்தை மளிகை கடையில் வைத்து பூட்டி விட்டு சக்தி வேல் வீட்டுக்கு சென்றார்.  வழக்கம் போல் சக்தி வேல் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ. 1½ லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரியவந்தது.

கொள்ளையர்கள் மளிகை கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை வேறு திசையில் திருப்பி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொள்ளையடித்து கொண்டு திரும்பிச் செல்லும் போது சி.சி.டி.வி. கேமராவின் ஹார்ட் டிஸ்க் மற்றும் டி.வி.ஆர்.யையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சக்தி வேல் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மளிகை கடையின் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொள்ளை நடந்த மளிகைகடை பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ளதாகும். அப்படி இருக்கும் போது மர்ம நபர்கள் துணிகரமாக கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News