புதுச்சேரி

பக்தர்களுக்கு அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா அன்னதானம் வழங்கினார்.

செங்கழுநீர் அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

Published On 2023-08-28 14:59 IST   |   Update On 2023-08-28 14:59:00 IST
  • அ.ம.மு.க. இணைச்செயலாளர் லாவண்யா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

அரும்பார்த்தபுரம் பேட் பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

8-ம் நாள் விழா மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு நலுங்கு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News