புதுச்சேரி

பெண்குழந்தை–களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கிய போது எடுத்த படம்.

பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா

Published On 2022-10-10 09:59 IST   |   Update On 2022-10-10 09:59:00 IST
  • பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
  • பெண்குழந்தை–களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

புதுச்சேரி:

புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார். விழாவில் புதுவை போலீஸ் ஐ.ஜி சந்திரன் கலந்துெகாண்டு அறக்கட்டளை சார்பில் சாரதி முதியோர் இல்ல நிறுவனர் கலைவாணி கணேசன, தன்னம்பிக்கைக் கலைக்குழு நிறுவனர் எலிசபெத் ராணி, ஆம்பூர் மாணவி அமிழ்தினி ஆகியோருக்கு விருது–களையும் பெண்குழந்தை–களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.விழாவுக்கு கிருஷ்ண–குமார், ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். பாவலர் ராசலட்சுமி வாழ்த்துப்பா வாசித்தார்.

பாவேந்தரின் கவிதை வரியான "எங்களுக்குக் காணிணும் சக்தியடா!" என்ற தலைப்பில் நடைபெற்றக் கவியரங்கத்தில் தமிழ்நாடு, புதுவையைச் சேர்ந்த 36 கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.

முன்னதாக சரஸ்வதி வைத்தியநாதன் வரவேற்றார். முடிவில் பச்சையம்மா பாண்டியன் நன்றி கூறினார். செல்வதுரை நீஸ், படைப்பாளி பைரவி, செயலர் வள்ளி நாடக கலைஞர் மோகன் உள்ளிட்டோர் ஏற்பாடு–களைச் செய்திருந்தனர்.

Tags:    

Similar News