புதுச்சேரி

சாதனையாளர்களுக்கு கலெக்டர் வல்லவன் விருது வழங்கி பாராட்டிய போது எடுத்தபடம்.

சாதனையாளர்களுக்கு விருதுகள்

Published On 2022-11-20 12:00 IST   |   Update On 2022-11-20 12:00:00 IST
  • புதுவை அய்யா மாரியப்பனார் -சுந்தராம்பாள் அறக்கட்டளை மற்றும் நண்பர்கள் தோட்டம் சார்பில் பட திறப்பு, நல உதவிகள் வழங்கல், நூல்கள் வெளியீடு, பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபத்தில் நடந்தது.
  • இதனைதொடர்ந்து தட்டச்சு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் வல்லவன் வழங்கி பாராட்டி பேசினார்.

புதுச்சேரி:

புதுவை அய்யா மாரியப்பனார் -சுந்தராம்பாள் அறக்கட்டளை மற்றும் நண்பர்கள் தோட்டம் சார்பில் பட திறப்பு, நல உதவிகள் வழங்கல், நூல்கள் வெளியீடு, பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்ளை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரையாற்றி னார். புதுவை நாடார் உறவின் முறை சங்க தலைவர் ராஜசேகரன், ஊர் பெரியவர்கள் சபாநாயகம், சோழன், ரவி, ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நண்பர்கள் தோட்டம் தலைவர் திருநாவுக்கரசு நோக்க உரையாற்றினார். அய்யா மாரியப்பனார்-சுந்தராம்பாள் திருவுருவ படத்தை துரைமாலிறையன் திறந்து வைத்தார். புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் கலந்து கொண்டு யுவபாரதி, திருமுருகன் மற்றும் தொரசாமி ஆகியோர் எழுதிய நூல்களை வெளியிட்டார். அதனை தேன்மொழி, டாக்டர் யுகபாரதி ஹரிகிருஷ்ணன் மற்றும் என்ஜினீயர் தமிழ் அமுது ஆகியோர் பெற்று கொண்டனர்.

இதனைதொடர்ந்து தட்டச்சு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் வல்லவன் வழங்கி பாராட்டி பேசினார். மேலும் சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்சங்க செயலாளர் சீனுமோகன்தாஸ், புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழக தலைவர் உசேன், சாகித்திய அகாடெமியின் பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமுருகன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார், உலக தமிழ் பேரியக்க தலைவர் தமிழ்மணி, இப்டா தலைவர் ஆதிவர்மன், பிரெஞ்சு பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயக்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் தேன்மொழி நன்றி கூறினார்.

Tags:    

Similar News