கோப்பு படம்
null
ஏ.சி, பிரிட்ஜ் பழுது நீக்கும் இலவச பயிற்சி
- புதுவயைில் மத்திய அரசின் ஊரக வளாச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- இந்த நிறுவனம் சார்பில் இலவச ஏ.சி. மற்றும் பரிட்ஜ் பழுதுநீக்குதல் பயிற்சி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி:
புதுவயைில் மத்திய அரசின் ஊரக வளாச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இலவச ஏ.சி. மற்றும் பரிட்ஜ் பழுதுநீக்குதல் பயிற்சி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. 30 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிக்கு 10-ம் வகுப்பு வரை பயின்ற 40 வயதுக்குட்பட்டவர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி திட்ட பாடங்கள் ஸ்கில் இந்தியா பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டது ஆகும்.
புதுவை யில் கடந்த 12 வருடங்களாக 8,552 இளை ஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய அரசு ஏ.ஏ. சான்றிதழ் அளித்து பாரட்டியுள்ளது.
இதில் சுய தொழில் பயிற்சியுடன் கடன் பெறவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.