புதுச்சேரி

தென்னைமரம் விழுந்தது

கூரை வீட்டின் மீது தென்னை மரம் விழுந்தது

Published On 2022-07-22 14:47 IST   |   Update On 2022-07-22 14:47:00 IST
  • பாகூரில் நேற்று இரவு திடீரென்று சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
  • இதில் பாகூர் பகுதியில் பல இடங்களில் தாழ்வானப் பகுதியில் தண்ணீர் தேங்கியது

புதுச்சேரி:

பாகூரில் நேற்று இரவு திடீரென்று சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் பாகூர் பகுதியில் பல இடங்களில் தாழ்வானப் பகுதியில் தண்ணீர் தேங்கியது. பாகூரை அடுத்துள்ள ஆதிங்கபட்டு சத்யா நகரை சேர்ந்த முத்தரசு (54) என்பவர் வீட்டில் எதிரே இருந்த தென்னை மரம் மின் கம்பியை அறுத்துக்கொண்டு அவரது வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது மின்கம்பி அருந்து வீட்டின் மீது விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முத்தரசு மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர்.தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News