புதுச்சேரி

கோப்பு படம்.

போலியாக தயாரித்த பொருட்களை விற்ற நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு

Published On 2022-10-27 14:56 IST   |   Update On 2022-10-27 14:56:00 IST
  • வெளிநாட்டைச் சேர்ந்த குபாட்டா என்ற பெயருடைய நெல் நடுவை மற்றும் அறுவடை எந்திரத்தின் உதிரி பாகங்கள் போலியான பெயரில் பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் பகுதியில் விற்கப்படுவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் சென்றுள்ளதாக தெரிகிறது.
  • இதையடுத்து சதீஷ்குமார் கரையாம்புத்தூர் புற காவல் நிலையத்தில் போலியான பொருள் விற்பனை செய்த அறுவடை எந்திரங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தார்.

புதுச்சேரி:

வெளிநாட்டைச் சேர்ந்த குபாட்டா என்ற பெயருடைய நெல் நடுவை மற்றும் அறுவடை எந்திரத்தின் உதிரி பாகங்கள் போலியான பெயரில் பாகூர் அடுத்த கரையாம்புத்தூர் பகுதியில் விற்கப்படுவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் சென்றுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து நிறுவனத்தின் சென்னை தெற்கு மண்டல இயக்குனர் சதீஷ்குமார், கடந்த 10-ந் தேதி சம்பவ இடத்திற்கு வந்து உதிரி பாகங்களை வாங்கி பார்த்துள்ளார். அதில் வண்ணம் மற்றும் வடிவமைப்பு அனைத்தும் இவர்கள் நிறுவனத்தில் உதிரிபாகங்களாக இருந்ததாக அவருக்கு தெரியவந்தது. தங்கள் நிறுவனத்தின் உரிமையை மீறி இதே பொருளை வேறு பெயரில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சதீஷ்குமார் கரையாம்புத்தூர் புற காவல் நிலையத்தில் போலியான பொருள் விற்பனை செய்த அறுவடை எந்திரங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தார்.

அதன் பேரில் கரையான்புத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News