புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் 44 பேருக்கு கொரோனா

Published On 2022-09-29 08:09 GMT   |   Update On 2022-09-29 08:09 GMT
  • புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
  • ஜிப்மரில் ஒருவர், கோவிட் கேர் சென்டரில் 4 பேர் என 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் புதுவையில் 34 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாமில் 4 பேர் என மொத்தம் 44 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாகியில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. தற்போது புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது.

ஜிப்மரில் ஒருவர், கோவிட் கேர் சென்டரில் 4 பேர் என 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் 324 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் இன்று 83 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9,93,147 பேருக்கும், 2-வது டோஸ் 8,51,468 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,76,530 பேருக்கும் என மொத்தம் 22,21,145 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,978 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News