வழிபாடு
பிரதோஷ வழிபாடு நடைபெற்ற போது எடுத்த படம்.

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா

Published On 2022-05-28 15:51 IST   |   Update On 2022-05-28 15:51:00 IST
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி:
 
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் சாமி கோவிலில் சுக்கிர வாரம் தேய்பிறை பிரதோஷ தினத்தை ஒட்டி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி கரபுரநாதர், நந்திகேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. 

தொடர்ந்து பிரதோஷ நாயனார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோவிலைவலம் வந்தனர். இதில் ஆட்டையாம்பட்டி, சேலம் குகை கொண்டலாம்பட்டி நெய்க்காரப்பட்டி அரியானூர், வீரபாண்டி, சூளைமேடு சமத்துவபுரம் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News