வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவை நிறுத்துவது குறித்து ஆலோசனை

Published On 2022-05-11 11:14 IST   |   Update On 2022-05-11 11:14:00 IST
கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறையை கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். இதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக கேரள போலீஸ் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறையை கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். இதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.

அதே நேரம் முன்பதிவு செய்யாத பக்தர்களும் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் நிருபர்களிடம் கூறியதாவது:

சபரிமலை கோவில் வளர்ச்சிக்காக அரசு ரூ.140 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் முன்பதிவை நிறுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News