செய்திகள்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேசுவரத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனிதநீராட தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீர்த்த கிணறுகள் திறக்கப்படுவது குறித்து அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 3-வது அலை பாதிப்பை தவிர்க்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
கோவில்களில் பக்தர்கள் அதிகளவு கூடுவார்கள் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டன. மேலும் திருவிழாக்கள், சுவாமி உற்சவம் ஆகியவை பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே எளிதாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடற்கரைகளில் பொது மக்களுக்கு இன்று முதல் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 3 நாட்களுக்குப் பிறகு நேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே வட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் இருந்தது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆனால் ராமேசுவரத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனிதநீராட தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீர்த்த கிணறுகள் திறக்கப்படுவது குறித்து அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவில்களில் பக்தர்கள் அதிகளவு கூடுவார்கள் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டன. மேலும் திருவிழாக்கள், சுவாமி உற்சவம் ஆகியவை பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே எளிதாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடற்கரைகளில் பொது மக்களுக்கு இன்று முதல் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 3 நாட்களுக்குப் பிறகு நேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே வட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் இருந்தது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆனால் ராமேசுவரத்தில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனிதநீராட தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீர்த்த கிணறுகள் திறக்கப்படுவது குறித்து அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல் சேதுக்கரை நவபாசன கடற்கரையிலும் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க... வருமானம் பெருக தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்