செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்ய காட்சி.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-06-21 13:07 IST   |   Update On 2017-06-21 13:08:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று (புதன் கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று (புதன் கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை ( 22-ந்தேதி) வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, 23-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. 24-ந் தேதி வெள்ளி பூதவாகனத்திலும், 25-ந் தேதி வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்), 26-ந் தேதி வெள்ளியானை வாகனத்திலும், 27-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 28-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடக்கிறது.

முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது.



30-ந் தேதி (வெள்ளிக் கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நட பெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசன விழா நடைபெறுகிறது.

ஜூலை 1-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Similar News