செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தின தீட்சிதர் காலை 7.20 மணிக்கு கொடியேற்றினார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து காலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. வருகிற 6-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 7-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 8-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.
9-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலா நடைபெறுகிறது.
10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
11-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி அம்மனுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதை யடுத்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
12-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் பட்டுரத்தின தீட்சிதர், துணைச் செயலாளர் நடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தின தீட்சிதர் காலை 7.20 மணிக்கு கொடியேற்றினார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து காலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. வருகிற 6-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 7-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 8-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.
9-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலா நடைபெறுகிறது.
10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
11-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி அம்மனுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதை யடுத்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
12-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் பட்டுரத்தின தீட்சிதர், துணைச் செயலாளர் நடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.