செய்திகள்

கொட்டாவி விடுவது இயல்பானதுதான்: விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பதில்

Published On 2019-06-23 13:11 GMT   |   Update On 2019-06-23 13:11 GMT
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சர்பராஸ் அகமது கொட்டாவி விட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், அவர் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக போட்டியின்போது கொட்டாவி விட்ட பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை அதிக அளவில் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொட்டாவி விடுவது இயல்பானதுதான் என பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘கொட்டாவி விடுவது இயல்பானதுதான். நான் அந்த விஷயத்தை சுற்றியே இருக்க விரும்பவில்லை. எனது கொட்டாவில் மக்களுக்கு பணம் கிடைக்கும் என்றால், அது நல்ல விஷயம்தான’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Tags:    

Similar News