உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

Published On 2023-01-21 22:28 GMT   |   Update On 2023-01-21 22:28 GMT
  • மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியாகினர்.
  • இந்த விபத்தில் இறந்தவர்களில் உக்ரைன் உள்துறை மந்திரியும் அடங்குவார்.

கீவ்:

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அந்நாட்டு உள்துறை மந்திரி டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் கீவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News