உலகம்

கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்

Published On 2022-11-21 05:19 GMT   |   Update On 2022-11-21 05:19 GMT
  • ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளியாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
  • பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

கிரீஸ்:

கிரீஸ் நாட்டில் வடகிழக்கு பகுதியான கிரீட் என்ற இடத்தில் இன்று அதிகாலை 1.25 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியது.

பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சுனாமி பீதி ஏற்பட்டதால் கடலோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உடனே காலி செய்து விட்டு உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News