உலகம்

போராட்டக்காரர்கள் பேரணி நடத்த போவதாக தகவல்: கொழும்பில் ராணுவம் தீவிர பாதுகாப்பு

Published On 2022-08-09 05:54 GMT   |   Update On 2022-08-09 05:54 GMT
  • இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று சென்றார்.

கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணியை நடந்த போராட்டக்காரர்கள் தயாராகியுள்ளனர். இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசேஷ அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு பிரிவு தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குழுக்கள் விழிப்புடன் வைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பை பாதுகாப்பதற்காக பல விசேஷ போலீஸ் படையினர் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அக்குரேகொடவில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென்று சென்றார்.

Tags:    

Similar News