உலகம்

குடும்பத்துடன் இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்சே

Published On 2023-01-07 02:30 GMT   |   Update On 2023-01-07 02:30 GMT
  • கோத்தபய ராஜபக்சே கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடினார்.
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு திரும்பினார்.

கொழும்பு :

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வலுத்து வன்முறையாக உருவெடுத்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடினார். பின்னர் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்தார். மக்களின் போராட்டம் ஓய்ந்த பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு திரும்பினார்.

இந்த நிலையில் நாடு திரும்பிய பிறகு முதல் முறையாக கடந்த மாத இறுதியில் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று, அங்கேயே குடியேற இருப்பதாகவும், இதற்காக அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் துபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பினார்.

Tags:    

Similar News