உலகம்

நிதி முறைகேடு புகார்: முன்னாள் இலங்கை அதிபருக்கு ஜாமீன்

Published On 2025-08-26 17:27 IST   |   Update On 2025-08-26 17:27:00 IST
  • இலங்கையின் ஜனாதிபதியாக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே.
  • அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

இலங்கை அதிபராக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே. ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர்.

இவர் அதிபராக இருந்த போது அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

Tags:    

Similar News