உலகம்

இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டம்: ரணில் விக்ரமசிங்கே

Published On 2023-01-26 08:54 IST   |   Update On 2023-01-26 08:54:00 IST
  • கடந்த மாதம் அவர் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • அதிபர் மாளிகையில் இக்கூட்டம் நடக்கிறது.

கொழும்பு :

இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தீர்வுகாண இலங்கை சுதந்திர தினமான பிப்ரவரி 4-ந் தேதிக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உறுதி பூண்டுள்ளார். கடந்த மாதம் அவர் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தநிலையில், இன்று (வியாழக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் மாளிகையில் இக்கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்சே, சிறிசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கோரிக்கையான அரசியல் சுயாட்சி குறித்து விவாதித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த இக்கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.சமீபத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்று வந்த நிலையில், இந்த கூட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News