உலகம்

15 வயது வாய்பேச முடியாத சிறுமி கடத்தல்: மதமாற்றி திருமணம் செய்த 7 பெண் குழந்தைகளின் தந்தை

Published On 2025-10-19 17:09 IST   |   Update On 2025-10-19 17:09:00 IST
  • கடந்த 9 நாட்களுக்கு முன் சிறுமி காணாமல் போனார்.
  • திடீரென மீடியா முன் திருமணம் செய்தவருடன் தோன்றினார்.

பாகிஸ்தானில் ஒருவாரத்திற்கு முன் காணாம் போன காது கேட்காத, வாய் பேசமுடியாத 15 வயது இந்து சிறுமியை, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வயதான நபர் கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் பதின் மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரைச் சேர்ந்த 15 வயது இந்து சிறுமிக்கு காதும் கேட்காது. வாய் பேசவும் முடியாது. இந்த சிறுமி கடந்த 9 நாட்களுக்கு முன் காணாமல் போனார். மகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

ஆனால், நேற்று அந்த சிறுமி பதின் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் முன் தோன்றினார். அப்போது, அவரை திருமணம் செய்தவரும், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறியதற்கான சான்றிதழுன் காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தனது மகள் கடத்தப்பட்டு, மதமாற்றி கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

போதைப்பொருள் தரகரும், ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையுமானவரை எப்படி எனது மகள் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பார் என பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிறுமி கடத்தப்பட்டுள்ளார். பெற்றோர்கள் புகார் அளித்தும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்துக்கள் மற்றும் மைனாரிட்டிகள் நலம் மற்றும் உரிமையாக்காக பணியாற்றும் தரவார் இட்டேகாத் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் சிவா கச்சி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அந்த சிறுமி இதை விருப்பத்துடன் செய்திருக்க முடியாது என்று நாங்கள் நம்புவதால், வழக்கைத் தொடர எங்கள் வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளோம். தனி விசாரணை நடத்தக்கோரி சீனியர் போலீசார் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News