உலகம்

இம்ரான்கான்

பாகிஸ்தான் இடைத்தேர்தல் - இம்ரான்கான் கட்சி அபார வெற்றி

Published On 2022-07-17 20:48 GMT   |   Update On 2022-07-17 20:48 GMT
  • பாகிஸ்தானில் சமீபத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது.
  • இதில் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது.

இந்நிலையில், சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. 

Tags:    

Similar News